சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வி.எம்.சுப்பிரமணியன் (70) வியாழக்கிழமை காலமானார்.
திருப்புவனம் ஒன்றியத்தைச் பறையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மானாமதுரை தொகுதியில் 1977, 1991 ஆகிய ஆண்டுகளில் இருமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.