சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வியாழக்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தேவகோட்டையைச் சேர்ந்த அழகப்பன் மகன் ஐயப்பன்(28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(28) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், தேவகோட்டை- திருப்பத்தூர் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே ஐயப்பனுக்கும், வினோத்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத்குமார் அரிவாளால் ஐயப்பனை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தேவகாட்டை போலீஸார் வழக்குப் பதிந்து வினோத்குமாரை தேடி வருகின்றனர்.