சிவகங்கை மாவட்டத்திற்குள்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை சரிபார்ப்பு பணி செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பதிவினை ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையினை கொண்டு அந்தந்த பகுதி வாக்குச் சாவடி நிலைய அலுவலர் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி வாக்காளர் பட்டியலில் திருத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.