சமூக வலைத் தளங்களில் அவதூறு சிவகங்கையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்   நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சின்னதம்பி முன்னிலை வகித்தார். இதில், சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்ய வேண்டும், இதைக் கண்டித்து பொன்னமராவதியில் போராட்டத்தில் ஈடுபட்ட  ஆயிரம் பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com