ஆடிப்பூர வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவு 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சனிக்கிழமை இரவு நடந்த ஆடிப்பூர வழிபாட்டில் அம்பாள் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 
ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் அலங்காரத்துடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதலுக்காக வளையல்களை வாங்கி வந்து அம்மனுக்கு அலங்காரம் செய்ய கொடுத்தனர். அதன்பின் வளையல்கள் மாலையாக தொடுக்கப்பட்டு ஆனந்தவல்லிக்கு அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆடிப்பூர வழிபாட்டு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. ஆடிப்பூர வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com