சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கடந்த ஜூலை 27 ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் பெருமாள், அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டத்தையொட்டி காலை 8 மணிக்கு மேல் சுவாமி திருத்தேர் எழுந்தருளல் நிகழ்வும், மாலை 4.30 மணிக்கு மேல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது. 11 ஆம் திருநாளான ஆக. 5 இல் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று தங்கத் தோளுக்கினியானில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெற உள்ளது.