சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரில் உள்ள செட்டிமடம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயிலில் மண்டாலபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் அனுக்ஞை விக்னேசுவரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர், தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பழையனூர், அழகுடையான், வல்லாரேந்தல், அச்சங்குளம், சங்கங்குளம் ஆகிய பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.