பள்ளியில் சதுரங்கப் போட்டி

சிவகங்கை சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
     சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு, சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ராணி தலைமை வகித்தார். மன்னர் பள்ளியின் தலைமையாசிரியர் என். சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டியை தொடக்கி வைத்தார்.
      இதில்,11, 14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில், சிவகங்கை வட்டாரம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து 272 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
      போட்டியின் முதன்மை நடுவர் அரசப்பன் மற்றும் சதுரங்கப் போட்டி நடுவர்கள் ராமசாமி, பாரதி, பாக்கியநாதன், சுல்தான் அலாவுதீன், பிரபாகரன், செந்தில், ராஜா, இளங்கோ, முரளிதரன் உள்பட ஆசிரிய,ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
     முன்னதாக, சொக்கநாதபுரம் உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வி. விசுவநாதன் வரவேற்றார். மன்னர் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அபுதாகீர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com