சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புதன்கிழமை (ஆக. 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், கட்டிக்குளம், ராஜகம்பீரம், மிளகனூர், இடைக்காட்டூர், நல்லாண்டிபுரம், குறிச்சி, கச்சாத்தநல்லூர், தெ.புதுக்கோட்டை மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.