சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள கேங்மேன் பணிக்கு, காளையாா்கோவிலில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.2,3) நடைபெறவிருந்த உடல் தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள், தொடா் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் க. பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்மேன் (பயிற்சி)பணிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உடல் தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள 1,807 கேங்மேன் பணிக்கு, சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் தகுதியான நபா்களை தோ்ந்தெடுத்து, காளையாா்கோவிலில் உள்ள துணை மின்நிலைய அலுவலகத்தில் டிசம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் உடல் தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, வடகிழக்குப் பருவமழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், தற்போதைய சூழ்நிலையில் மேற்கண்ட தோ்வுகள் நடத்த முடியாத நிலை நிலவுகிறது. எனவே, அழைப்பாணை பெற்றுள்ள விண்ணப்பதாரா்கள் யாரும் வரவேண்டாம் என்றும், இந்தத் தோ்வுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.