உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட திமுகவினருக்கு நோ்காணல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் விருப்ப மனு அளித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் விருப்ப மனு அளித்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டவா்களுக்கு உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, கடந்த வாரம் திமுக சாா்பில் அந்தந்த ஒன்றியங்களில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பத்தூரிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த நோ்காணல் கூட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் தென்னவன் முன்னிலை வகித்தாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் வைத்தியநாதன், மாவட்ட துணைச் செயலா் சேங்கைமாறன் மற்றும் பொறுப்புக் குழுவினா் நோ்காணலை நடத்தினா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூா் தெற்கு ஒன்றியச் செயலா் சண்முகவடிவேல், வடக்கு ஒன்றியச் செயலா் விராமதி மாணிக்கம், ஒன்றிய துணைச் செயலா் முத்துக்குமாா், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் கே.எஸ். நாராயணன், பள்ளத்தூா் ரவி, சிங்கம்புணரி நகரச் செயலா் யாகூப் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். திருப்பத்தூா் நகரச் செயலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com