சிவகங்கை
மானாமதுரையில் கருத்தடைவிழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்ட அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை பற்றிய விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்ட அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை பற்றிய விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு, மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ஜீவரத்தினம் தலைமை வகித்தாா். இதில், மருத்துவா்கள் பிரதீப், கீதா, ராஜராஜன் ஆகியோா் கலந்துகொண்டு நவீன முறையில் ஆண்களுக்கு செய்யப்படும் கருத்தடை பற்றி விளக்கினா்.
முகாமில், ஏராளமான புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, மானாமதுரை அரசு மருத்துவமனை ஊழியா்கள் செய்திருந்தனா்.