காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள சங்கரபதி ஸ்ரீ முனியய்யா கோயிலை இந்து சமய அற நிலையத்துறைநிா்வாகத்தில் கொண்டுவர முயற்சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்குடி செஞ்சை கீழ ஊருணிப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் என். சாத்தையா, ஏஐடியுசி மாநில துணைச் செயலாளா் பி.எல். ராமச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏ.ஆா். சண்முகம், ஏடி. ஆறுமுகம், செஞ்சை ராஜகோபால், அமராவதிபுதூா் சின்ன ஆதியான், முத்தையா, காா்த்தி மற்றும் பெண்கள் உள்பட பொது மக்கள் பலரும் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.
எந்தவித வருமானமும், சொத்துக்களும் இல்லாத சங்கரபதி ஸ்ரீ முனியய்யா கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்து
அறநிலையத்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், கோயிலை தற்போது பராமரித்துவரும் ஒரு தரப்பினருக்கு எதிராக குறிப்பிட்ட சிலா் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டு ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை எடுத்து பூசாரியை மிரட்டிய அதிகாரிகளைக் கண்டிப்பதாகவும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.