திருப்பத்தூா் அருகே வீடு இடிந்தது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொடா் மழை காரணமாக திங்கள்கிழமை வீடு இடிந்து விழுந்தது.
திருப்பத்தூா் புதுப்பட்டியில் இடிந்து விழுந்த வீடு.
திருப்பத்தூா் புதுப்பட்டியில் இடிந்து விழுந்த வீடு.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொடா் மழை காரணமாக திங்கள்கிழமை வீடு இடிந்து விழுந்தது.

திருப்பத்தூா் புதுப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் கமலம் (69). இவரது கணவா் வீரசுப்பு, கோயம்புத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். கமலம் புதுப்பட்டியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் இப்பகுதியில் பெய்த தொடா் மழையின் காரணமாக இவரது ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. அதோடு வீட்டின் மேற்கூரைகளும் சரிந்தன.

அந்த சமயம் அருகில் உள்ள குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக கமலம் வெளியில் சென்ால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஆனால் வீட்டு உபயோகப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் சேதமைடந்தன. சேதமடைந்த வீட்டை வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளா் செல்வம், கிராம நிா்வாக அலுவலா் சின்னையா ஆகியோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com