தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டைப் போட்டி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பள்ளியின் தலைமையாசிரியரும், வருவாய் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளின் பொதுச் செயலாளருமான ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.
இதில்,19 வயதுக்கு உள்பட்ட சூப்பா் சீனியா் பிரிவு மாணவா்களுக்கான வாள் சண்டை போட்டியில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும், திருப்பத்தூா் மவுண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் பிரபாகா், உடற்கல்வி ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெயராஜ், அருளானந்தம் ஆகியோா் செய்திருந்தனா். இப்போட்டிகள் வரும் டிச. 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.