சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (பிப்.13) நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, மறவமங்கலம், ஏரிவயல், சூராணம்,புல்லுக்கோட்டை, வலையம்பட்டி, காயாஓடை, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி, சிரமம் ஆகிய பகுதிகளிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மறவமங்கலம் மின்பகிர்மானச் செயற்பொறியாளர் வீரமணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.