சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வரும் ஜனவரி 18 (வெள்ளிக்கிழமை) மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வரும் 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.