சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்து முன்னணி சார்பில் நடந்த இவ்விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து சைக்கிள், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் ஊர்வலமாக காந்திசிலைக்கு வந்தனர். சுந்தரபுரம் தெருப் பகுதியில் விவேகானந்தர் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் குப்புச்சாமி, பாஜக நகர் தலைவர் சங்கரசுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.