சுண்ணாம்பிருப்பு அரசுப் பள்ளியில் பொலிவுறு வகுப்பு தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட நன்கொடையாளர் அம்பலத்தரசு பொலிவுறு வகுப்பறையைத் தொடக்கி வைத்தார்.  பள்ளியின் தன்னார்வலர் ரெத்தினம் வாழ்த்துரை வழங்கினார். 
பொலிவுறு வகுப்பு மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் சிறப்பான முறையில் வெளிப்பட வேண்டும் என வட்டாரவளமையப் பயிற்றுனர் வனிதா பேசினார். 
முன்னதாக தலைமை ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். விழா ஏற்பாட்டினை அறிவியல் ஆசிரியர் கற்பகசுந்தரி மற்றும் ரெக்ஸ்அந்தோணி, ஜெகதீசன் ஆகியோர் செய்திருந்தனர்.  பட்டதாரி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங்க் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com