தேவகோட்டை அருகே கோட்டவயலில் திருவள்ளுவர் தினத்தையொட்டி விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி கிராமத்திலுள்ள அம்மன் கோயில் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். அதனைத்தொடர்ந்து கோலப்போட்டி, கோகோ போட்டி, சிலம்பப் போட்டி, கபடிப் போட்டி, உறியடித்தல், இள வட்டக்கல் தூக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றன. இளவட்டக்கல் தூக்கிய வீரர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கலா ரவீந்திரன் வழங்கினார்.
விளாங்காட்டூர் நாட்டுச்சேரி கிராம குடியிருப்பில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. பின்னர் ஓட்டப் போட்டி, கபடிப் போட்டி, கோலப்போட்டி, சாக்கு ஓட்டப் போட்டி, இசை நாற்காலி போட்டி, உறியடித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. ஏற்பாட்டினை கிராம இளைஞர் நற்பணிமன்றத்தினர் செய்தனர்.