மரத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

மானாமதுரை அருகே மரத்திலிருந்து கீழே தவறி விழுந்து காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மானாமதுரை அருகே மரத்திலிருந்து கீழே தவறி விழுந்து காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே வன்னிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (50). இவர் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கிராமத்தில் உள்ள மரத்தில் ஏறினார். 
அப்போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com