சிவகங்கை
தேவகோட்டையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியர்கள் சார்பில் மழை வேண்டி கூட்டுத் தொழுகை நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியர்கள் சார்பில் மழை வேண்டி கூட்டுத் தொழுகை நடத்தப்பட்டது.
தேவகோட்டை முகமதியார்பட்டினம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை அறிந்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள தேனமை ஊருணியை சீரமைக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது பங்களிப்பு நிதியிலிருந்து ஊருணியை தூர்வாரினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, ஊருணியில் 150-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரண்டு, மழை வேண்டி கூட்டுத் தொழுகை நடத்தினர்.
அனைத்து மதத்தினரும் சேர்ந்து பொதுமக்கள் பங்களிப்பு நிதியிலிருந்துரூ.10லட்சம் செலவில் தேனமை ஊருணியைச் சுத்தம் செய்தனர்.