அரசு திருமண உதவி திட்டத்தை செயல்படுத்த திமுக கோரிக்கை

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என இளையான்குடி ஒன்றிய திமுக கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 இளையான்குடியில் ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட சிறுபான்மையினர் உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் நாசர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆறு.செல்வராசன், பேரூர் செயலாளர் நஜூமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியசரன் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இளையான்குடி ஒன்றியம் முழுவதும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, வரும் 19 ஆம் தேதி இளையான்குடியில் திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் ஈரோடு இறைவனை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்துவது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
மேலும் கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ள பயனாளிகள் பல மாதங்களாக நலத்திட்ட உதவியை பெற முடியாமல் உள்ளனர். 
எனவே, தமிழக அரசு மேற்கண்ட திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இக்கூட்டத்தில் திமுக மாவட்ட மாணவரணி சந்திரசேகர் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மலைமேகு, பிபு, கண்ணன், பெரோஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com