மானாமதுரை பேரூராட்சியில் ஊருணிகளை தூர்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரூராட்சியில் தூர்ந்துபோயுள்ள ஊருணிகளை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேரூராட்சியில் தூர்ந்துபோயுள்ள ஊருணிகளை தூர்வாரி சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, பேரூராட்சித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     மானாமதுரை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி எல்கையில் 9 ஊருணிகள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே பேரூராட்சி நிர்வாகம் மூலம் 4 ஊருணிகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.
     இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சீரமைக்கப்படாமல் உள்ள ஊருணிகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க உள்ளாட்சித் துறை நிர்வாகம், பேரூராட்சித் துறைக்கு சுற்றிக்கை அனுப்பியிருந்தது. அதையடுத்து, மானாமதுரையில் தூர்வாரி சீரமைக்க வேண்டிய ஊரணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   அதனடிப்படையில், சீரமைக்கப்படாமல் உள்ள 5 ஊருணிகளை தூர்வாரி சீரமைக்க, மானாமதுரை பேரூராட்சி நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழைக் காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஊருணிகள் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com