சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதன்கிழமை மின்வயரை பல்லால் கடித்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இளையான்குடி சன்புதீன் தெருவை சேர்ந்தவர் பஷீர்ரகுமான் (24), இவர் புதன்கிழமை தனது வீட்டில் வயரிங் வேலை பார்த்துள்ளார். அப்போது மின்சார வயரை பல்லால் கடித்து இழுத்தபோது மின்சாரம் பாய்ந்ததில் பஷீர்ரகுமான் மயக்கமடைந்தார். இதையடுத்து இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பஷீர்ரகுமான் உயிரிழந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.