சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் உள்ள ஸ்ரீசொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் ஆனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சொர்ண மூர்த்தீஸ்வரர் புஸ்பம், யானை, குதிரை, கருடன், பூத வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திராளானோர் கலந்து கொண்டனர்.