இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இளையான்குடியில் அச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியத் தலைவர் சந்தியாகு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மு.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் வீரையா, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் வெ.கருப்புச்சாமி, ஜனநாயக வாலிபர்
சங்க மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஜேம்ஸ்ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கே.அழகர்சாமி, மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் இன்னாசிராஜா, ஒன்றிய நிர்வாகிகள் ராஜீ, பிரவீன் பிரதாப், விடுதலை சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் ஜேம்ஸ்வளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.