பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் சனிக்கிழமை முதியவரிடம் 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ராசு (66). இவர் வங்கியில் நகையை அடகு வைப்பதற்காக வீட்டிலிருந்து 10 பவுன் நகையை பையில் எடுத்து வந்துள்ளார். ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை அருகே வந்து கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ராசுவிடம் அறிமுகம் ஆனவர்கள் போல் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது அவர் பையில் நகை வைத்திருப்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம நபர்கள் திடீரென 10 பவுன் நகையுடன் அந்த பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பரமக்குடி நகர்
காவல் நிலையத்தில் ராசு அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.