சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல் விளக்கத்தை செய்து காட்டினர்.
இதில் தேர்தல் பணியில் உள்ள மானாமதுரை மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரேஸ்வரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜேம்ஸ், திலகவதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகரன், கிராம உதவியாளர் பெருமாள் ஆகியோர் மானாமதுரை பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து செயல் விளக்கம்
செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பொதுமக்கள் பங்கேற்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தனை அழுத்தி தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்குப்பதிவு இயந்திரத்தின் திரையில் பார்த்து தங்கள் வாக்கு பதிவாகியுள்ளதை உறுதி செய்தனர்.