விபத்தில் உயிரிழந்த உணவக உரிமையாளர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க தேவகோட்டை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகிலுள்ள குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பன் மகன் களஞ்சியம் (44). இவர் சென்னையில் உணவகம் நடத்தி வந்தார். இவர், கடந்த 5.9.2016 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்குச்சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டிருந்தார். பிராந்தனி விலக்கு அருகில் வந்தபோது சிவா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் களஞ்சியம் உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் தேவகோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம் விபத்தில் உயிரிழந்த களஞ்சியம் குடும்பத்திற்கு ரூ.24 லட்சத்து 32 ஆயிரத்து 500 ஐ 7.50 சதவீத வட்டியுடன் வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.