மானாமதுரை பகுதியில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.
மானாமதுரை பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மக்கள் கோடை மழையை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந் நிலையில் புதன்கிழமை மானாமதுரை பகுதியில் திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. அதன்பின் பரவலாக மிதமான மழை பெய்தது. தொடர்ந்து அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
திருப்புவனம் பகுதியில் மாலையில் மழை மேகங்கள் திரண்டு வந்தபோதும் மழை யெய்யவில்லை. ஆனால் குளிர்ந்த காற்று வீசியது.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உள்ள பெருங்கருணை கிராமத்தில் புதன்கிழமை மாலையில் திடீரென சூறாவளிக் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில் கூரைவீடுகள், ஓட்டு வீடுகளின் மேல் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி ஆண்டனா விழுந்து சேதமடைந்தன. ஊரில் அருகில் இருந்த மின் மாற்றி மீது மரம் விழுந்து தீப்பற்றியதால் அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.
கோடையில் பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, கேள்வரகு போன்ற தானியங்களை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.