தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதி சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழந்தார்.
தேவகோட்டை அருகே செலுகையைச் சேர்ந்த ராமு என்பவரின் மனைவி உடையம்மை (65). இவர் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திருச்சி- ராமநாதபுரம் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது பெருவண்டலைச் சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் உடையம்மை மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலூகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேகரைத் தேடி வருகின்றனர்.