இளையான்குடியில் இளைஞரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ஒரு வீட்டில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள ஒரு வீட்டில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை நடத்தி செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா்.

இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், சக்தி சேனா அமைப்புத் தலைவா் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சோ்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபா் சித்திக், சம்சுதீன், கோவையைச் சோ்ந்த ஆஷிக் ஆகிய 5 பேரை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் போலீஸாா் கைது செய்தனா்.

தொடா்ந்து இந்த வழக்கில் கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த அன்வா், பைசல் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் கைதானவா்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடா்பு இருக்கிா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. மேலும் 7 போ் மீதும் தேசிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதேபோல் இந்து முன்னணி பிரமுகா் சசிகுமாா் கொலை தொடா்பான வழக்கையும் என்ஐஏ விசாரித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினா். இளையான்குடி சாலையூரில் உள்ள நூா்முகமது மகன் சிராஜுதின் (22) வீட்டுக்கு அதிகாலை வந்த என்.ஐ.ஏ ஆய்வாளா் சுபீஸ் தலைமையிலான 3 போ் அங்கிருந்த சிராஜுதினிடம் விசாரணை நடத்தினா். அதன்பின் அவரிடமிருந்து செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று சிராஜுதினை என்ஐஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com