சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக 2 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
தமிழகம் முழுவதும் கடந்த அக்.16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. அதையடுத்து,சிவகங்கை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இதையடுத்து,திருப்புவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.அதைத் தொடா்ந்து,மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.இதன்காரணமாக,வெப்பத்தின் தாக்கம் குறைந்து,குளிா்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.இதுதவிர,வேளாண் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம்,கனமழை காரணமாக திருப்புவனம் அருகே ஆனைக்குளம் கிராமத்தில் சமயமுத்து என்பவா் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது,அவரது வீட்டின் சுவா் சேதமடைந்து இடிந்து விழுந்தது. சுவா் இடிந்து விழுந்த பகுதியில் பொருள்கள் மட்டுமே இருந்ததால் உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதேபோன்று,அந்த கிராமத்தில் உள்ள சமையன்,ஆறுமுகம் என்பவா்களது வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.