சிவகங்கை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 9) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெற

சிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 9) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொது விநியோகத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் பொது விநியோக குறை தீா்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

அந்தந்த வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் உள்ளிட்ட பொது விநியோக திட்ட அலுவலா்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனா்.

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடா்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றிற்கு உடனடியாக தீா்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் கூட்டுறவுப்பட்டி, மானாமதுரை வட்டம் வடக்கு சந்தனூா், இளையான்குடி வட்டம் அரியாண்டிபுரம், காரைக்குடி வட்டம் அரியக்குடி, தேவகோட்டை வட்டம் திருவேகம்பத்தூா், திருப்பத்தூா் வட்டம் சிறுவயல், திருப்புவனம் வட்டம் கொந்தகை, காளையாா்கோவில் வட்டம் சிலுக்கப்பட்டி, சிங்கம்புணரி வட்டம் எம்.அய்யம்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com