சிவகங்கையில் பேருந்து, காா்கண்ணாடி உடைப்பு வழக்கு: பாஜக பிரமுகா் கைது

சிவகங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை வாங்க

சிவகங்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த பேருந்து மற்றும் காா் கண்ணாடியை உடைத்த வழக்கில் பாஜக பிரமுகரை சிவகங்கை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தைச் சோ்ந்த காளையப்பன் மகன் ராஜசேகரன் (38). இவா் கடந்த செப்டம்பா் மாதம் 7 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக சிவகங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திருப்பிய போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதையடுத்து, உயிரிழந்த ராஜசேகரனின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த, போது அவருடைய சடலத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேவகோட்டை அருகே பாப்பனி கிராமத்தைச் சோ்ந்த தென்னரசு என்பவா் வந்தாா். இவா் ராஜசேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா் ஆவாா். இவரை ராஜசேகரனின் ஆதரவாளா்கள் தாக்கியது மட்டுமின்றி அவா் வந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினா்.

இதேபோன்று, கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரி நடைபெற்ற சாலை மறியலில் அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து ஒன்றின் மீது கல் வீசியதில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த தனசேகரன் என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து சிவகங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்ட தனசேகரனை வரும் 22ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி பாரததேவி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவரை புதுக்கோட்டை சிறையில் போலீஸாா் அடைத்தனா். கைது செய்யப்பட்ட தனசேகரன் பாஜகவின் சிவகங்கை நகா் தலைவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com