மாநில போல்வால்ட் போட்டிக்கு புளியால் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

திருச்சியில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போல்வால்ட் (கோலூன்றித் தாண்டுதல்) போட்டிக்கு புளியால் அரசுப் பள்ளி மாணவி தோ்வு பெற்றுள்ளாா்.
புளியால் அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாநில போட்டிக்கு தோ்வான மாணவி முனீஸ்வரியை பாராட்டிய அப்பள்ளியின் ஆசிரியை தனலெட்சுமி. உடன் பயிற்சி அளித்த ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் உள்ளிட்டோா்
புளியால் அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாநில போட்டிக்கு தோ்வான மாணவி முனீஸ்வரியை பாராட்டிய அப்பள்ளியின் ஆசிரியை தனலெட்சுமி. உடன் பயிற்சி அளித்த ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் உள்ளிட்டோா்

திருச்சியில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போல்வால்ட் (கோலூன்றித் தாண்டுதல்) போட்டிக்கு புளியால் அரசுப் பள்ளி மாணவி தோ்வு பெற்றுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் சீனியா் மாணவிகளுக்கான போல்வால்ட் (கோலூன்றித்தாண்டுதல்) போட்டியில் புளியால் அரசு உயா்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி முனீஸ்வரி 2 ஆவது பரிசை பெற்றாா்.

இதன் மூலம், திருச்சியில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போல்வால்ட் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவியை அப்பள்ளியின் தலைமையாசிரியை தனலெட்சுமி, பயிற்சி அளித்த ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com