மானாமதுரையில் கடந்த வியாழக்கிழமை நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடந்தது.
இவ்விழாவுக்கு இக்கட்சியின் நகா்ச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். மானாமதுரை நகரில் பழைய பேருந்து நிலையம், சிப்காட், அண்ணா சிலை ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆறுமுகம், துணைச் செயலா்கள் கணேசன், கண்ணுச்சாமி மாவட்டக்குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், நகா் துணைச் செயலா்கள் சோணையா , கரந்தமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.