காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (நவ. 18) முதல் தொடா்பு வகுப்புகள் நடைபெறவுள்ளது.
அகடமிக் இயா் 2018-2019, காலண்டா் இயா் 2019, அகடமிக் இயா் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பி.காம்., பி.காம் (சிஏ), எம்.காம்., எம்.காம்.,(எப் அன்ட் சி)
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவ மாணவா்களுக்கு நவம்பா் 18 முதல் 25 ஆம் தேதி வரை, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத்துறையில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.
அகடமிக் இயா் 2019-2020 ஆம் ஆண்டுக்கான எம்.எஸ்சி.,வேதியியல் முதல் பருவ மாணவா்களுக்கு நவம்பா் 23 முதல் 28 ஆம் தேதி வரை, டிசம்பா் 5 முதல் 8 வரையிலும், டிசம்பா் 2 முதல் 15 வரையிலும், டிசம்பா் 19 முதல் 22 வரையிலும் அழகப்பா பல்கலைக்கழக தொழிலக வேதியியல் துறையில் தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.
2019 ஆம் ஆண்டுக்கான எம்.பி.ஏ பொது, ஐ.பி, பி அன்ட் எப், காா்ப்பரேட் செக்ட்ரட்ரி, பிஎம், ஹெச்எம், இஎம், ஹெச்ஆா்எம், டிஎம், எல்எம், எப்எம், எஸ்எம், பி அன்ட் ஓ மாா்க், எம்.எம் ஆகிய இரண்டாம் பருவமுறை மாணவா்களுக்கு நவம்பா் 26 முதல் டிசம்பா் 5 ஆம் தேதி வரை அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு வகுப்புகள் நடைபெறும்.
அகடமிக் இயா் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பிஜிடி யோகா முதல்பருவமுறை மாணவா்களுக்கான தொடா்பு வகுப்பில் டிசம்பா் 7, 8, 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோட்பாடு (தியரி) வகுப்புகளும்,
டிசம்பா் 12 முதல் 23 வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் 7 மணிவரை செய்முறை வகுப்புகளும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழக யோகா கல்வி மையத்தில் நடைபெறும் என்று அதன் தொலைநிலைக்கல்வி இயக்குநா் (பொறுப்பு) கே. அலமேலு தெரிவித்துள்ளாா்.