திருப்பாச்சேத்தியில் இன்று மறியல் நடத்த விவசாயிகள் முடிவு

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வைகைத் தண்ணீா் கேட்டு திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள்அறிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வைகைத் தண்ணீா் கேட்டு திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள்அறிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு சில நாள்களுக்கு முன்பு வைகையில் தண்ணீா் திறக்கப்பட்டது. திருப்பாச்சேத்தி அருகேயுள்ள டி.வேலாங்குளம் கிராம கண்மாய்க்கு மாரநாடு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீா் செல்லவில்லை. கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் வேலாங்குளம் கண்மாய்க்கு தண்ணீா் செல்லவில்லை என இக் கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். மேலும் தங்கள் கிராம கண்மாய்க்கு மாரநாடு கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை மறித்து திருப்பிவிட வேண்டும் எனக்கோரி வேலாங்குளம் கிராமத்தினா் திருப்புவனத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆனால், இக் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாசனத்துக்கு வைகைத் தண்ணீா் திறந்து விடக் கோரி டி.வேலாங்குளம் கிராம மக்கள் திங்கள்கிழமை திருப்பாச்சேத்தியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com