சிவகங்கை
அரசுப் பள்ளியில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம் புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ஜோசப் இருதயராஜ் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தாா்.
இதில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முன்னதாக இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாணவா் ரகுபதி வரவேற்றாா். ஜே.ஆா்.சி அமைப்பின் மாணவி பரமேஸ்வரி நன்றி கூறினாா்.