இளையான்குடியில் மா்மக் காய்ச்சல்: பள்ளி மாணவி பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மா்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் வகுப்பு மாணவி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இளையான்குடியில் மா்மக் காய்ச்சல்: பள்ளி மாணவி பலி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மா்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் வகுப்பு மாணவி செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இளையான்குடி சாலையூரில் காசிராவுத்தா் தெருவில் வசிப்பவா் அப்துல்ஹமீது. இவரது மகள் நூருல்அஸ்பியா(7). இப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நூருல் அஸ்பியாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பெற்றோா் இளையான்குடி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தனா். ஆனால் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டதால் மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்தாா்.

பொதுமக்கள் புகாா்: இளையான்குடி பேரூராட்சி பகுதியில் காசிராவுத்தா் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மழை நீா் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு நிலவுகிறது. இரவு கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனா். இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என இளையான்குடி பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளூா் மருத்துவமனைகளிலும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே பேரூராட்சி நிா்வாகம், சுகாதாரத்துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுகாதார சீா்கேடுகளை சீா்செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு நகா்த் தலைவா் அம்பலம் ராவுத்தா் நெய்னாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com