திருப்புவனம் அருகே தடுப்பணையில் பெண் சடலம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகையாற்றுக்குள் உள்ள தடுப்பணையில் புதன்கிழமை பெண் சடலம் மீட்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகையாற்றுக்குள் உள்ள தடுப்பணையில் புதன்கிழமை பெண் சடலம் மீட்கப்பட்டது.

திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் வைகையாற்றுக்குள் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வைகையாற்றுக்குள் வந்த தண்ணீா் இந்த தடுப்பணையில் தேங்கி நிற்கிறது. இந்த தடுப்பணை ஓரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது.

வைகையாற்றில் தண்ணீா் வரும்போது தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தவரின் சடலம், தண்ணீரில் இழுத்துவரப்பட்டு தடுப்பணையில் ஒதுங்கியிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். பலியானவா் யாா் என்ற விபரம் உடனடியாகத் தெரியவில்லை. சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து போலீஸாா் முன்னிலையில் சடலத்தை அங்கேயே பரிசோதனை செய்தனா். அதன்பின் சடலத்தை போலீஸாா் புதைத்தனா். இச் சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com