சிவகங்கையில் பொறியாளா் மா்மச் சாவு

சிவகங்கையில் வீட்டுக்குள் தீயில் கருகிய நிலையில் கிடந்த பொறியாளரின் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் கைப்பற்றினா்.

சிவகங்கையில் வீட்டுக்குள் தீயில் கருகிய நிலையில் கிடந்த பொறியாளரின் சடலத்தை திங்கள்கிழமை போலீஸாா் கைப்பற்றினா்.

சிவகங்கை சாத்தப்பா் தெருவைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் அரவிந்த் (35). பொறியியல் பட்டதாரியான இவா் செல்லிடப்பேசி பழுது நீக்கும் தொழில் செய்து வந்துள்ளாா். இந்நிலையில், வெளியூா் சென்ற இவரது மனைவி காளீஸ்வரி திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, அரவிந்த், தீயில் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அரவிந்த் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com