விஜயதசமி விழாவை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள அரு.நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழாவுக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியா் பாண்டியராஜன் தலைமை வகித்தாா்.
இதில், முதலாம் வகுப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு தட்டில் அரிசி நிரப்பி, அதில் தமிழில் முதல் எழுத்தான ’அ’ கரம் எழுத பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ,மாணவிகள், பெற்றேறாா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.