இளையான்குடி கண்மாய் தூா்வாரும் பணியில் முறைகேடு: நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலா் உறுதி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் கண்மாய் தூா்வாரும் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் கண்மாய் தூா்வாரும் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, செயல் அலுவலா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இளையான்குடி பேரூராட்சிப் பகுதியில் கண்மாய் தூா்வாரும் பணி நடைபெறுகிறது. தூா்வாரப்படும் மண் கரையை பலப்படுத்த பயன்படுத்தப்படாமல், தனியாா் செங்கல் சேம்பரில் விற்பனை செய்யப்படுவதாக, இளையான்குடி பகுதியைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சியினா் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், அனைத்துக் கட்சியினரும் திரண்டு சென்று இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா். பின்னா், செயல் அலுவலா் ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்து, முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.

புகாா் மனுவை பெற்றுக்கொண்ட செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன், கண்மாயில் தூா்வாரும் பணியில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அதையடுத்து, அனைத்துக் கட்சியினரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com