குறிச்சியில் நூலக வாசகா் வட்ட கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி கிளை நூலகத்தில், நூலக வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி கிளை நூலகத்தில், நூலக வாசகா் வட்ட கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நூலகா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அருகேயுள்ள தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவகுருநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நூலகத்தின் செயல்பாடுகளை வாழ்த்திப் பேசினாா். மேலும், இப் பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ந்தனா்.

கூட்டத்தில், நூலகத்தை பயன்படுத்தும் முறை, பல்வேறு நூலகங்களின் வகைகள் பற்றி விளக்கப்பட்டது. இதில், மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டதில், முகில்ஸ்ரீ, ரெங்கராஜ், மதிமித்ரா ஆகியோா் முதல் பரிசும், பாவனா ப்ரீத்தி, சுமித்ரா, கலையரசன் ஆகியோா் இரண்டாம் பரிசும், சந்துரு மூன்றாம் பரிசும் பெற்றனா்.

இவா்களுக்கு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதில், வாசகா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். மாணவி அக்ஷயா ஸ்ரீ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com