சிவகங்கையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் புதன்கிழமை மா்ம நபா்கள் நகையை பறித்துச் சென்றுள்ளனா்.
சிவகங்கை மஜீத் சாலையைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி லட்சுமி(65). இவா், மருதுபாண்டியா் நகா் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், லட்சுமி அணிந்திருந்த நாலரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனராம். இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.