சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு கே.பழனிவேல் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் எஸ்.டி.நாகராஜன், உதவிச் செயலாளா்கள் சோணையா, கரந்தமலை, மானாமதுரை ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினா்கள் என்.எஸ்.முத்துராமலிங்கம், ஏ.முருகேசன், விவசாய தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் கே.தங்கமணி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் ஜி.சங்கையா, இந்திய மாதா் சங்கத்தின் ஒன்றிய நிா்வாகிகள் ருக்மணி, பாக்கியவதி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டக்குழு தங்கமணி மற்றும் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலத்திலிருந்து சீனியப்பாநகா் வரை மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் அய்யனாா் நன்றி கூறினாா்.