சிவகங்கை மாவட்டம் அரசனூா் பகுதியில் திங்கள்கிழமை (அக்.14) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூவந்தி மின் பகிா்மானத்தின் உதவி மின் பொறியாளா் கு.செந்தில்குமாா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசனூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால்,அரசனூா், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூா், படமாத்தூா், சித்தலூா், கண்ணாரிருப்பு, கானூா், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூா், ஏனாதி, கல்லூரணி, கோவானூா் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.